×

நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க திருடிய பணத்தை வாரி இறைத்தோம்: கைதான மாஜி ராணுவ வீரர் வாக்குமூலம்


மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், திருவட்டார் உள்ளிட்ட பகுதியில் வழிப்பறி கொள்ளையில் தொடர்புடைய முளகுமூடு வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்த மெர்லின் ராஜ் (39), அவரது நண்பர் மேக்காமண்டம் பூந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோர் நேற்று திக்குறிச்சி அருகே காரில் வந்தபோது போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மெர்லின் ராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நான் 10 ஆண்டுகளாக ராணுவத்தில் வேலை பார்த்து வந்தேன். 2016ம் ஆண்டு ஒழுங்கீன நடவடிக்கையில் என்னை ராணுவம் டிஸ்மிஸ் செய்தது.

2016ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தபோது பல நிறுவனங்களில் வேலை தேடி அலைந்தேன். ஆனால் சரியான வேலை கிடைக்காததால் பண கஷ்டம் ஏற்பட்டது. எனவே பல இடங்களில் திருடினால் எளிதாக பணம் சம்பாதித்து விடலாம் என்று திட்டமிட்டேன். அப்படித்தான் 2019ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் ரயில்வே ஸ்டேஷனில் முதல்முறையாக செயின் திருட்டில் ஈடுபட்டேன்.அங்கு மட்டுமல்லாது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் பெண் கொலை வழக்கு மற்றும் பல திருட்டு வழக்குகளில் சிக்கினேன். என் மீது பல போலீஸ் நிலையங்களில் மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னுடன் மணிகண்டனும் சேர்ந்து திருடுவதற்கு உதவி செய்தார். வாகனத்தில் செல்லும்போது போலீசார் என்னை வழிமறித்தால், ராணுவத்தில் பணியாற்றிய அடையாள அட்டையை காண்பித்துவிட்டு தப்பிவிடுவேன்.

திருடிய பணத்தில் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். ஜாலியாக ஊர் சுற்றுவோம். அதேபோல் சினிமாவில் அழகாக இருக்கும் துணை நடிகைகளை குறிவைத்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பதற்காக பணத்தை வாரி இறைத்தோம். இவ்வாறு மெர்லின் ராஜ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.கைதான 2 பேரிடமும் இருந்து 4 வழக்குகளில் தொடர்புடைய 20 பவுன் நகை மீட்கப்பட்டது. அதேபோல் கார், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க திருடிய பணத்தை வாரி இறைத்தோம்: கைதான மாஜி ராணுவ வீரர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Merlin Raj ,Mulakumudu ,Thiruvatar ,Kumari ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...