×

ஐ.சி.எஃப்-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்..!!

சென்னை: சென்னை ஐ.சி.எஃப்-ல் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களை ரயில்வே குழு நியமனங்களை புறக்கணிப்பதாக எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் ஐ.சி.எஃப்-ல் பயிற்சி பெற்ற பழகுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஐ.சி.எஃப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஐ.சி.எஃப்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு 25 ஆண்டுகளாக தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி நியமனம் வழங்கவில்லை என்றும், இதனால் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 20-ந் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை எனக்கூறி இன்றைய தினம் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

The post ஐ.சி.எஃப்-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கோரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Central Railway Station ,ICF ,CHENNAI ,MGR ,Chennai ICF ,Central Railway Station ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது