- சாமி
- ஷாருகன்
- நயன்தாரா திருப்பதி
- ஆந்திரப் பிரதேசம்
- ஷாருக்கான்
- நயன்தாரா
- திருப்பதி எத்துமாலயன்
- ஷாருகன்
- நயன்தாரா திருப்பதி சாமி
ஆந்திரா: ஜவான் திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் படம் ஜவான் அனிரூத் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் 7ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் ஜவான் திரைப்பட குழுவுடன் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சுப்ரபாத சேவையில் ஸ்வாமிதரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள தங்க குடிமரத்தை ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் வணங்கி வழிபட்டனர். ஜவான் திரைப்பட குழுவினரை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வந்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இருப்பினும் காவல்துறையின் பாதுகாப்புடன் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் காரில் ஏறி புறப்பட்டனர்.
The post நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்: ஷாருக்கானுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.