கும்பகோணம், செப். 5: அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் இணைய வழியாக மட்டுமே வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவினை திரும்ப பெறக்கோரி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் வழக்கறிஞர் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் செல்வம், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், உதவி செயலாளர் அருள், பொருளாளர் ராஜா சீனிவாசன், நூலக பொறுப்பாளர் சசிகலா, வழக்கறிஞர்கள் ராஜசேகர், சங்கர், காஸ்பரோ ஆனந்த், மூத்த வழக்கறிஞர்கள் சக்கரபாணி, கலியபெருமாள், முரளி, பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post கும்பகோணத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
