வேதாரண்யம், செப். 5: வேதாரண்யம் தாலுக்கா பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கனகவள்ளி (57). இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில் மீன், இறால் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திருக்கை மீன் குத்தியதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறி மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆற்றில் மீன் பிடிக்கும்போது திருக்கை மீன் குத்தி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post ஆற்றில் மீன் பிடித்த போது திருக்கைமீன் குத்தி பெண் பலி appeared first on Dinakaran.
