×

மின் மோட்டார் திருடிய இரும்பு கடைக்காரர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.5: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (60), விவசாயி. இவரது கிணற்றிலிருந்த நீர் மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்ததால், அதனை கிணற்றின் அருகேயுள்ள அறையில் வைத்திருந்தார்.நேற்று முன்தினம் காலை, சென்று பார்த்த போது மின் மோட்டார் திருடு போயிருப்பது தெரிந்தது.

சந்தேகத்தின்பேரில் அ.பள்ளிபட்டியில் வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் பழைய இரும்பு கடைக்கு சென்று பார்த்த போது, அங்கு மதியழகனின் மின் மோட்டார் இருந்தது. இதுபற்றி மதியழகன் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, மதியழகனின் மின்மோட்டாரை திருடியது வெங்கடேசன்(48) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

The post மின் மோட்டார் திருடிய இரும்பு கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Papriprettipatti ,Mathiyalagan ,Pudupatti ,
× RELATED மது விற்றவர் கைது