×

அணுகு சாலை அமைக்க கோரி அவனியாபுரம் விவசாயிகள் மனு

மதுரை, செப். 5: மதுரை அவனியாபுரம் பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் பொதுமக்கள் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து மக்கள் குறைதீர் முகாமில் கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில், ‘மதுரை மாநகராட்சி 100வது வார்டான எங்கள் பகுதியில் 50 ஏக்கர் அளவிற்கான பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் நிலத்திற்கு செல்ல அணுகு சாலை இன்றி சிரமப்படுகிறோம். எனவே இப்பகுதியில் அணுகு சாலை அமைத்து பாதை ஏற்படுத்தி தர வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அணுகு சாலை அமைக்க கோரி அவனியாபுரம் விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram ,Madurai ,president ,Shanmugasundaram ,Dinakaran ,
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி