×

ஒட்டன்சத்திரத்தில் மாணவர்களுக்கு செஸ் போட்டி: மாவட்ட அளவில் நடைபெற்றது

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட செஸ் போட்டி நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் மாவட்ட அளவில் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், பழநி, நத்தம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கான போட்டிகள் 9, 12, 15 என்ற வயதுகளின் அடிப்படையில் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் ஒட்டன்சத்திரம் அக்சயா சி.பி.எஸ்.இ பள்ளி, திண்டுக்கல் செயின்ட் ஆன்டனி பள்ளி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தினை வென்றது.

இரண்டாம் இடத்தை திண்டுக்கல் அச்சுதா பள்ளி வென்றது. நிகழ்வில் தலைமை நடுவர் கருணாகரன், திண்டுக்கல் மாவட்ட செஸ் அசோசியேசன் துணைச் செயலாளர் சின்னத்துரை, நடுவர்கள் ஜேம்ஸ், அரவிந்த் பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் ஒருங்கிணைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post ஒட்டன்சத்திரத்தில் மாணவர்களுக்கு செஸ் போட்டி: மாவட்ட அளவில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Ottenchatra ,Ottenchatram ,Kalanchipatti ,Ottanchatram.… ,Ottanchatram ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் காய்கறி...