×

திருவட்டார் அருகே பூங்காவில் வாலிபர் சடலம்

குலசேகரம், செப்.5 : திருவட்டார் அருகே பூங்காவில் வாலிபர் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவட்டாரை அடுத்து உள்ள அருவிக்கரை பகுதியில் பரளியாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று உள்ளது. அதன் அருகே அணைக்கரை பார்க்கில் பயணிகள் ஓய்வு எடுக்கும் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிழற்குடையில் நேற்று காலை வாலிபர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் மது பாட்டில்கள் கிடந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருவட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் அருவிக்கரை முள்ளங்கோட்டுவிளை பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி சுனில் (36) என்பது தெரியவந்தது. இருப்பினும் அவரது சாவுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிங்ஸ்லி சுனில் எப்படி இறந்தார்? அவரது சாவில் ஏதாவது மர்மம் இருக்கிறதா? வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவட்டார் அருகே பூங்காவில் வாலிபர் சடலம் appeared first on Dinakaran.

Tags : Thiruvattar ,Kulasekaram ,Thiruvatar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...