×

அரசாணை வெளியீடு கவுரவ விரிவுரையாளருக்கு ஊதிய உயர்வு

சென்னை: இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல், அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

The post அரசாணை வெளியீடு கவுரவ விரிவுரையாளருக்கு ஊதிய உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,of Engineering ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...