
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதில், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் திருப்போரூரில் அதிகபட்சமாக 90மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடுகாரணமாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 10ம் தேதி வரை நீடிக்கும்.
The post தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.