×

ஒன்றிய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்களுக்கு பொன்குமார் அழைப்பு

சென்னை: விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதைப் போன்று சனாதன கோட்பாடுகளை வேரோடு அழித்து சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பதற்கு தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும். அந்த இலக்கிற்காக வரும் 6ம் தேதி மாலை 4 மணி அளவில், ஒன்றிய அரசின் இப்படிப்பட்ட செயலை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட புசாரா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு மோடி அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

The post ஒன்றிய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: தொழிலாளர்களுக்கு பொன்குமார் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Ponkumar ,Chennai ,Farmers- Workers Party ,Welfare ,Sports Development Minister ,Bonkumar ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...