×

மியான்மரில் டிரோன் தாக்குதல் 5 பேர் பலி

பாங்காக்: கிழக்கு மியான்மரில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆங் சான் சூகியின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்து 2021 பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக்கும்பல் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது.

இந்த நிலையில் நேற்று கிழக்கு மியான்மரில் மைவாடி நகரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் டிரோன் மூலம் கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ பட்டாலியனின் தற்காலிக தளபதி லெப்டினன்ட் கர்னல் ஆங் கியாவ் மின் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

The post மியான்மரில் டிரோன் தாக்குதல் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Drone ,Myanmar ,Bangkok ,eastern Myanmar ,Drone attack ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்