×

குடும்பம் நடத்த பாட்டில் பொறுக்கும் சினிமா நடிகர்

வேடசந்தூர்: தன் உடலில் தீக்குச்சியை உரசி பற்றவைக்கும் முன்னாள் திரைப்பட நடிகர் ஒருவர், குடும்பம் நடத்த வழியின்றி பாட்டில் பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு மது போதையில் இருந்த ஒருவர், தீக்குச்சியை ஸ்டைலாக உடலின் பல பாகங்களில் உரசி நெருப்பு பற்ற வைத்தார். அவரிடம் விசாரித்தபோது, அந்தோணி என்ற அவர் நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊர் ராசா, சசிகுமாரின் சுப்பிரமணியபுரம், கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி மற்றும் வியூகம், மோசடி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது வேடசந்தூர் ஒயின்ஷாப்பில் பாட்டில் பொறுக்கி விற்று தனது பிழைப்பை நடத்தி வருவதாக கூறினார். சினிமாவில் தனக்கு அங்கீகாரத்துடன் வருமானம் கிடைத்தால், சம்பாதிக்கும் பணத்தை பொதுமக்கள் நலனுக்காக செலவு செய்வேன் என்றார். இதுபோல் பேசிக்கொண்டே தீக்குச்சியை எடுத்த அவர் தனது உடலில் பல இடங்களில் உரசி அதனை பற்றவைத்தார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இவர் உடலில் தீக்குச்சி உரசி பற்றிவைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post குடும்பம் நடத்த பாட்டில் பொறுக்கும் சினிமா நடிகர் appeared first on Dinakaran.

Tags : Vedasanthur ,
× RELATED வேடசந்தூர் அருகே 17ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு