×

மேலூர் கிடாரிபட்டியில் ஆசிரியர்களுக்கு கிரிக்கெட் போட்டி

மேலூர், செப். 4: மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. மேலூர் அருகே கிடாரிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த இப்போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவண முருகன் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டிகளை ஆசிரியர்கள் பொன்ராஜ் ஜோசப், ரத்தினசாமி, பழனி முருகன், பூமிநாதன், கலைவாணி, ஜியாவுல், ராஜேஷ்குமார் ஒருங்கிணைத்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

The post மேலூர் கிடாரிபட்டியில் ஆசிரியர்களுக்கு கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Melur Gitaripatti ,Melur ,Madurai ,Mellur Kitaripatti ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!