×

கஞ்சா, போதை மாத்திரை கடத்திய 5 பேர் கைது

மதுரை, செப். 4: மதுரையில் கஞ்சா, போதை மாத்திரைகளை கடத்திய விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை தல்லாகுளம் எஸ்ஐ ராஜேஷ்குமார் தலைமையிலான போலீசார் பீ.பீ.குளம் உழவர்சந்தை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்த சிலர் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் செல்லூரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பதும், அவரிடம் 100 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள்- ஊசி உள்ளிட்டவை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், கே.கே. நகர் மெடிக்கல் உரிமையாளர் ராஜாமுகமது (57) என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி நவீன், அபிஷேக் (23), கோபிநாத் (23) ஆகியோருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இந்த 4 பேருடன் மெடிக்கல் உரிமையாளர் ராஜாமுகம்மதுவையும் கைது செய்தனர்.

The post கஞ்சா, போதை மாத்திரை கடத்திய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி