×

ஓடும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் கை, கால் துண்டாகி உயிரிழப்பு: பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பரிதாபம்

 

தண்டையார்பேட்டை, செப்.4: பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் கை, கால் துண்டாகி பரிதாபமாக பலியானார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை, திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் நின்று, புறப்பட்ட போது, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, நிலை தடுமாறி விழுந்தார்.

அப்போது, ரயிலில் சிக்கி, அவருடைய ஒரு கை, ஒரு கால் துண்டானது. உடனே அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சென்ட்ரல் ரயில்வே ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரக்குமார் (33) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ரயில்வே பணியில் சேர்ந்துள்ளார். பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் வேலை முடித்து அம்பத்தூரை அடுத்த அண்ணனுர் செல்வதற்காக ரயிலில் ஏறியபோது விபத்தில் சிக்கி பலியானார் என்பது தெரியவந்தது.

The post ஓடும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த ரயில்வே ஊழியர் கை, கால் துண்டாகி உயிரிழப்பு: பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Basinbridge railway station ,Pantadarpet ,Basin Bridge Railway Station ,Dinakaran ,
× RELATED பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே...