×

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் பங்கேற்ற புரட்சி பயண தொடக்க விழா ரத்து: மழை குறுக்கிட்டதால் ஒத்திவைப்பு

சென்னை: காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற புரட்சி பயண தொடக்க விழா மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதிமுகவை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் நடைபெறவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி அதற்கான தொடக்க விழா நேற்று களியனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.நாடாளுமன்ற வடிவில் அமைக்கப்பட்ட மேடையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஆனால் புரட்சி பயணத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை. திடீரென மழை பெய்ததால் புரட்சி பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.பா. கிருஷ்ணன், ஜேசிபி பிரபாகர், மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் வி.புகழேந்தி, மருது அழகுராஜ், ரவீந்திரநாத், ஜெயபிரதீப், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித் குமார், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கோமளா எழிலரசன், சோமமங்கலம் ரமேஷ், பெருநகர சகுந்தலா கோபால், வஜ்ரவேலு, ஒன்றிய செயலாளர்கள் சசி, அருண், சரவணன், கோவிந்தராஜ், முனிரத்தினம், தினேஷ்குமார், மணிகண்டன், வெங்கடேசன், மாவட்ட அவைத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் பங்கேற்ற புரட்சி பயண தொடக்க விழா ரத்து: மழை குறுக்கிட்டதால் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Revolution Travel Opening Function ,Kangipuram ,Chennai ,Revolution Travel ,Bannerselvam ,OPS ,Cancelled ,Revolution Travel Opening Festival ,Kanzipuram ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...