×

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2ம் தேதி இரவு முட்டம் கிராமத்திலிருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்ற நான்கு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் கடலூர், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(25) என்பவர் இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு ரூ.2லட்சமும், காயமடைந்த அஜித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

The post சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Muttam ,Kattumannarkovil ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...