×

மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 12 கட்டிடம் பகுதியை சேர்ந்தராஜேந்திரன் மகன்கள் மணிகண்டன்(25), ராஜாராமன்(23) ஆகியோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில் உள்ள பாலமான் ஓடையில் மீன்பிடிக்க வலை விரித்துள்ளனர். சிறிது நேரம் சென்று வலையை இழுத்தபோது, அதில் சுமார் 4 அடி 20 சென்டி மீட்டர் நீளமுள்ள நாட்டு துப்பாக்கி சிக்கியிருந்தது. அதை சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, ஓடையில் கிடந்த துப்பாக்கி யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Rajendran ,Manikandan ,Rajaraman ,Annamalai Nagar 12 ,Chitambaram, Cuddalore district ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...