×

ஜி20 கூட்டமைப்பு மாநாடு நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 207 ரயில் சேவைகள் ரத்து

டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய 3 நாட்களுக்கு, 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 36 ரயில்கள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது. மாநாடு, 2 நாட்களுக்கு (செப். 9,10) நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டெல்லி உச்சி மாநாடு நடைபெறுவதை ஒட்டி டெல்லிக்கு செல்லும் டெல்லி வழியே செல்லும் 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 36 ரயில்கள் குறிப்பிட்ட தூரம் வரையில் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜி20 கூட்டமைப்பு மாநாடு நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 207 ரயில் சேவைகள் ரத்து appeared first on Dinakaran.

Tags : services ,G20 Federation Conference ,Delhi ,cancellation ,Dinakaran ,
× RELATED கர்ப்பிணிகள் தனியாக வெயில் நேரத்தில்...