×

டூவீலரிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

திருமங்கலம், செப். 3: கள்ளிக்குடி அருகே குராயூரினை சேர்ந்தவர் செல்வராணி (50). இவர் நேற்று முன்தினம் மகன் பாலமுருகனுடன் (28). கள்ளிக்குடியில் காய்கறி வாங்கி கொண்டு டூவீலரில் ஊருக்கு திரும்பினார். சென்னம்பட்டி அருகே வந்த போது ரோட்டின் நடுவே சென்ற பாம்பு மேல் டூவீலரை ஏற்றுவதை தவிர்க்க சடன் பிரேக் அடித்தார். அப்போது செல்வராணி டூவீலரிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வராணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலரிலிருந்து தவறி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Selvarani ,Kurayurin ,Kallikudi ,Balamurugan ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...