×

குடவாசல் அரசு கல்லூரி மாணவர்கள்நீட் தேர்வுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

வலங்கைமான், செப்.3: நீட் எதிர்ப்பு போராளி அனிதா நினைவு தினத்தை முன்னிட்டு குடவாசல் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி வாயில் முன், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தனது மருத்துவ படிப்பை தொடர முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி குடவாசல் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்தது.

அப்போது, ஒன்றிய அரசின் நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மாணவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட துணை செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். கல்லூரி கிளைசெயலாளர் ரஞ்சித், தலைவர் சிவசக்தி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் நினைவஞ்சலி உறுதிமொழி கூட்டத்தில் பங்கேற்றனர்.

The post குடவாசல் அரசு கல்லூரி மாணவர்கள்நீட் தேர்வுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Gudavasal Government College ,NEET ,Valangaiman ,Anita ,Gudavasal MGR Government Arts College ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது