×

மினி லாரி மோதி வாலிபர் பலி

ஆலங்குளம், செப்.3: ஆலங்குளம் அருகே கீழ காட்டூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகன் (42). இவர் தனியார் பீடி கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். முருகன் நேற்று காலை தென்காசி அருகில் உள்ள மத்தளம்பாறை, திரவியம் நகர், புல்லுக்காட்டுவலசை ஆகிய கிராமங்களில் உள்ள பீடிகடைகளில் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பூலாங்குளம் நெல்லையப்பபுரம் சாலையில் அள்ளிக்குளம் அருகே வந்தபோது ஆண்டிபட்டியில் இருந்து மாதாபுரம் செங்கல்சூளைக்கு விறகு ஏற்றி வந்த மினி லாரி. மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார்.

The post மினி லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Murugan ,Kee Kattur Subramaniapuram ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு