×

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவனை கொன்ற மனைவி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் குப்பாயிவலசையை சேர்ந்தவர் செல்லமுத்து (63). விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள் (55). குடிப்பழக்கம் உள்ள செல்லமுத்து தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி இரவு செல்லமுத்து குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொன்னாத்தாள், கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில், படுகாயம் அடைந்த செல்லமுத்து அலறியுள்ளார். சத்தம் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிந்து பொன்னாத்தாளை கைது செய்தனர்.

The post கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவனை கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Chellamuthu ,Kallimandayam Kuppayiwalasai ,Othanchatram ,Ponnathal ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...