×

மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறதா? எம்எல்ஏ ஆய்வு

 

ஆண்டிமடம், செப்.2: பெரியகிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறதா? என்று க.சொ.க.கண்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை ருசித்துப் பார்த்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளி கட்டிடம் மற்றும் இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். இதில் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன், ஆசிரியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறதா? எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Antimadam ,Periyakrishnapuram Government Middle School ,K. Sp. ,G.K. Kannan ,Dinakaran ,
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு