×

ஆயக்காரன்புலத்தில் 500 குடும்பத்தினருக்கு தென்னங்கன்று வழங்கல்

 

வேதாரண்யம், செப்.2: வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாலு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் இளைஞரணி விக்னேஷ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரையன், உதவி வேளாண்மை அலுவலர் இந்திரா உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கபட்டன.

The post ஆயக்காரன்புலத்தில் 500 குடும்பத்தினருக்கு தென்னங்கன்று வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ayakkaranpulam ,Karanchi ,Sethi Panchayat ,Vedaranyam Taluk Ayakkaranpulam ,
× RELATED ஆயக்காரன்புலம் கலிதீர்த்தஐயனார்...