×

மாரத்தான் போட்டியை முன்னிட்டு அடையாறு, மயிலாப்பூர் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்; காவல்துறை அறிவிப்பு

சென்னை, செப்.2: சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐபிஏ நீரத்தான் எனும் மாரத்தான் ஓட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் 7.30 மணி வரை 10 கி.மீ, 5 கி.மீ மற்றும் 3 கி.மீ வீதம், பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளியில் தொடங்கி, எம்ஆர்சி நகர் வரை சென்று மீண்டும் ஆல்காட் நினைவுப் பள்ளி வரை நடைபெறுகிறது. இதனால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அடையாறு உட்கோட்ட மாற்று வழிகள்:
 எல்.பி சாலையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி 3வது அவென்யு & 2வது அவென்யு வழியாக உள்வரும் அனைத்து வாகனங்களும் டாக்டர் முத்துலட்சுமி பார்க் வழியாக திருப்பி விடப்பட்டு, எல்.பி சாலை, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை வழியாக கடற்கரை நோக்கி அனுப்பப்படும்.
 சாஸ்திரி நகர் பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர் முத்துலட்சுமி பார்க் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) 7வது அவென்யு சந்திப்பு- எம்.ஜி சாலை- எல்.பி சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.
மயிலாப்பூர் உட்கோட்ட மாற்று வழிகள்:
 மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனங்கள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் எஸ்.வி.படேல் சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.
 கிரீன்வேஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஆர்.கே.பிராடீஸ் கோட்டை வழியாக டிஜிஎஸ் தினகரன் சாலை, இசைக் கல்லூரி மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்படும்.
 டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் அடையாறு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

The post மாரத்தான் போட்டியை முன்னிட்டு அடையாறு, மயிலாப்பூர் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்; காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : marathon ,Mayilapur ,Chennai ,Chennai City Transport Police ,IPA Dieratan ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்