×

ஜெராக்ஸ் கடைக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? கல்வி ஆவணங்களுடன்

செய்யாறு, செப்.2: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். பிளஸ் 2 முடித்துவிட்டு சென்னை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29ம் தேதி தனது மார்க் ஷீட், டி.சி ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ராந்தம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லையாம். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகிறார்.

The post ஜெராக்ஸ் கடைக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? கல்வி ஆவணங்களுடன் appeared first on Dinakaran.

Tags : Xerox ,Seyyar ,Vembakkam taluk ,Dinakaran ,
× RELATED வறண்டு போனது வெங்கச்சேரி தடுப்பணை: விவசாயிகள், மக்கள் வேதனை