×

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு அட்டவணை உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பயிலும், அனைத்து பள்ளிகளின் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வை இந்தாண்டு நடத்துவதற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல, திறனாய்வு தேர்வு என்ற பெயரில் தமிழ் இல்லாத பிற பாடங்களுக்கான திறனாய்வு தேர்வு செப்டம்பர் 23ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திறனறி தேர்வு தமிழ்மொழிக்கு மட்டும் நடத்தப்படும். ஒரு மாணவனுக்கு மாதம் ரூ.1500 என 2 ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் பரிசு மொத்தம் 1500 பேருக்கு வழங்கப்படும்.

இதில் அனைத்து பள்ளிகளின் 11ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க முடியும். அதேபோல, திறனாய்வு தேர்வு தமிழ் தவிர்த்த பிற பாடங்கள் அனைத்திற்கும் சேர்த்து நடத்தப்படுவதாகும். இந்த தேர்வில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும். ஒரு மாணவனுக்கு ஓராண்டுக்கு ரூ.10ஆயிரம் வீதம் ஆண்டுகளுக்கு ரூ.20,000 பரிசு மொத்தம் 1000 பேருக்கு மட்டும் வழங்கப்படும். அதனால் திறனறி தேர்வுக்கு திறனாய்வு தேர்வு மாற்று அல்ல. எனவே, தமிழ்மொழி இலக்கியத் திறனறி தேர்வும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அதற்கான அட்டவணையை அரசின் தேர்வுகள் துறை உடனடியாக வெளியிட வேண்டும்.

The post தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு அட்டவணை உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramdas ,CHENNAI ,BAMAGA ,Ramadas ,Twitter ,Tamilnadu ,
× RELATED ஆன்லைன் ரம்மி தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்