
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 59,808 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,618 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ3.60 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் டிபிசி காம்ப்ளக்ஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
The post திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.