×

2 பாகிஸ்தானியர்கள் ஊடுருவியதாக மும்பை தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பை தாஜ் ஓட்டலை வெடிகுண்டு வைத்து தகர்க்க உள்ளதாகவும், அதற்காக 2 பாகிஸ்தானியர்கள் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியானதால், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர், ‘பாகிஸ்தானை சேர்ந்த இருவர் அரபிக்கடல் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் மும்பை நகரின் முக்கிய ஓட்டலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பார்கள். என்னுடைய பெயர் முகேஷ் சிங்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

மும்பை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் உண்மையான பெயர் ஜகதம்ப பிரசாத் சிங் என்பதும், அவர் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த 35 வயது நபர் என்றும், தற்போது அவர் சாண்டாக்ரூஸில் வசிக்கிறார் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2008ம் ஆண்டில் மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள தாஜ் ஓட்டலை தீவிரவாதிகள் தாக்கினர். இந்த ஓட்டலுக்கு ஏற்கனவே பல வெடிகுண்டு மிரட்டல் போன்கால்கள் வந்துள்ளன என்பதால், தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post 2 பாகிஸ்தானியர்கள் ஊடுருவியதாக மும்பை தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Taj Hotel ,Mumbai ,Pakistanis ,Mumbai Taj Hotel ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...