×

பிரபல மலையாள நடிகை தூக்கு போட்டு தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள சினிமா மற்றும் டிவி நடிகை அபர்ணா நாயர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரம் கரமனை தளியில் பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர் (36). பிரபல நடிகை ஆவார். மேக தீர்த்தம், முத்துகவு, அச்சாயன்ஸ், கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல், கல்கி உள்பட மலையாளப் படங்களிலும், ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்தநிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் மின் விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதை பார்த்ததும் அவரது வீட்டில் இருந்த தாயும், தங்கையும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பக்கத்து வீட்டினரின் உதவியுடன் அபர்ணா நாயரை மீட்டனர்.

பின்னர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அபர்ணா நாயர் இறந்து விட்டதாக கூறினர். இதைகேட்டு குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதனர். நடிகை அபர்ணா நாயருக்கு, ரஞ்சித் என்ற கணவரும், 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து கரமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல மலையாள நடிகை தூக்கு போட்டு தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Abarna Nair ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...