- பவித்ர உத்வம்
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்
- மன்னார்குடி
- பவித்ரா உற்சவம்
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்
மன்னார்குடி, ெசப். 1: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆவணி மாத பவித்ர உற்சவத்தின் 4ம் நாளான நேற்று முன்தினம் உற்சவர் பெருமாள், பவித்ர மாலை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, கடந்த 27ம் தேதி துவங்கிய பவித்திர உற்சவம் வரும் 5ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது.பவித்திர உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள யாக சாலையில் புனித நீர் கடங்களில் வைக்கப்பட்டு பூஜை செய்து மூலவர் பெருமாளுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும். பவித்ர உற்சவத்தின் 4ம் நாளான நேற்று, பெருமாள் பவித்ர மாலை அணிந்து கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
The post மன்னார்குடிராஜகோபால சுவாமி கோயிலில் பவித்ர உற்சவம் appeared first on Dinakaran.