×

நன்னிலம் அருகேசாலையோர வீட்டுக்குள் லாரி புகுந்தது5 பேர் உயிர்தப்பினர்

திருவாரூர், செப். 1: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சாலையோர வீடு ஒன்றில் லாரி புகுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா அச்சிதமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயராமன் (60). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (55), மருமகள் புவனேஸ்வரி, இவரது மகன்கள் லட்சன், தர்ஷன் ஆகிய 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நன்னிலம் – கும்பகோணம் நெடுஞ்சாலையை ஒட்டி இவர்கள் வசிக்கும் வீடு உள்ளது.

இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை டால்மியாபுரத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஜெயராமன் வீட்டுக்குள் புகுந்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, டால்மியாபுரத்திலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று, இதேபோல் ஜெயராமன் வீட்டுக்குள் புகுந்த நிலையில் அப்போதும் வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

The post நன்னிலம் அருகேசாலையோர வீட்டுக்குள் லாரி புகுந்தது5 பேர் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Nannilam ,Tiruvarur ,Nannilam, Tiruvarur district ,Lorry ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது