×

குண்டாசில் 3 பேர் கைது

 

விருதுநகர், செப்.1: விருதுநகர் அருகே ரோசல்பட்டி கிராமத்தில் கடந்த ஜூன் 20ல் முத்துப்பாண்டி(17) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித் என்ற அஜித்குமார்(26), விஜய் என்ற செல்வம்(19), தனுஷ்(19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஸ்ரீனிவாசபெருமாள் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கலெக்டர் ஜெயசீலன் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post குண்டாசில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundasil ,Virudunagar ,Thuthuppandi ,Rosalbati ,Dinakaran ,
× RELATED குண்டாசில் இருவர் கைது