தொண்டி, செப்.1: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளை மணல் தெரு, பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நாய்கள் கூட்டமாக திரிகிறது. கடந்த இரு தினங்களாக பெண்கள் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் ஏராளமான நாய்கள் புகுந்து மாணவிகளை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் பேருராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆசிக் கூறியது, தெருவில் நாய் அதிகம் திரிகிறது. குழந்தைகளை பாதுகாப்பது பெரும் பாடாக உள்ளது. இரண்டு நாள்களாக பெண்கள் பள்ளி கூடம் உள்ளே அதிக நாய் திரிகிறது. பேரூராட்சியில் முறையிட்டும் பலன் இல்லை. மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post தொண்டி பகுதியில் மாணவிகளை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.
