×

தமிழக காங்கிரஸ் சார்பில் நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு மரியாதை: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாமன்னன் பூலித்தேவனின் 308வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ரூபி ஆர். மனோகரன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

The post தமிழக காங்கிரஸ் சார்பில் நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் சிலைக்கு மரியாதை: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,Phulidevan ,Nelkotumcheval ,K.S.Azhagiri ,Chennai ,Congress ,President ,KS Azhagiri ,India ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்