×

லலிதா நடராஜன் சிகிச்சைக்காக அமைச்சர் கீதா ஜீவன் ரூ.5 லட்சம் ‘செக்’ வழங்கினார்

சென்னை: குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா நடராஜன் சிகிச்சைக்காக முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வழங்கினார். சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா நடராஜன், கடந்த மாதம் 9ம் தேதி சென்னையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர், தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லலிதா நடராஜனை நேரில் சென்று பார்த்தார்.

இந்நிலையில், லலிதா நடராஜன் சிசிக்சைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதற்கான காசோலையினை லலிதா நடராஜனின் இளைய சகோதரர் கணேஷிடம் நேற்று தலைமை செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார். அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு மற்றும் சென்னை கலெக்டர் அருணா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post லலிதா நடராஜன் சிகிச்சைக்காக அமைச்சர் கீதா ஜீவன் ரூ.5 லட்சம் ‘செக்’ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Keita Jeevan ,Lalita Natarajan ,Chennai ,Chief Minister ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...