×

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோ அப்டேட்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி உறுதி செய்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் லட்சிய விண்வெளி பணியான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து சந்திர மேற்பரப்பில் கால் வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல ஊர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வருகிறது. ஒரு பெரிய பள்ளத்தை கண்டறிந்து தனது பாதையை மாற்றியது.

தொடர்ந்து நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. இதுதவிர ஆக்சிஜன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி உறுதி செய்தது. விக்ரம் லேண்டரில் உள்ள RAMBHA-LP என்ற கருவி நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா உள்ளதை அளவிட்டுள்ளது.

ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 5 முதல் 30 மில்லியன் வரையில் எலக்ட்ரான்கள் உள்ளது. பிளாஸ்மா சூழலை முதன் முதலில் அளவீடு லேண்டர் செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிலவிலிருந்து பூமிக்கு தொலைத் தொடர்பு கதிர்களை அனுப்பும் போது ஏற்படும் இரைச்சலை தவிர்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

The post நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோ அப்டேட் appeared first on Dinakaran.

Tags : Srihrikota ,Space Research ,
× RELATED பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய...