×

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதி: அசாமில் 2026ம் ஆண்டுக்குள் 1,000 புதிய பாலங்கள்

கவுகாத்தி: அசாமில் காமாக்யா கேட் முதல் மாலிகான் வரையிலான 2.6 கிமீ நீளமுள்ள மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மிக நீளமானதாக கருதப்படும் இந்த மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீப காலங்களில் 842 சிறிய மற்றும் பெரிய பாலங்களை மாநில அரசு கட்டி முடித்துள்ளது. இன்னும் 1,000 பாலங்களுக்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டங்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். கவுகாத்தி வடகிழக்கு நுழைவாயில் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற விரும்புகிறோம்.

தற்போது, பொதுமக்களுக்காக ‘நீலாச்சல் மேம்பாலத்தை’ திறந்து வைக்கிறோம். இது கவுகாத்தியின் பரபரப்பான சாலைகளில் ஒன்றில் கட்டப்பட்டுள்ளது. ரூ.420 கோடி முதலீட்டில் மாநில பொதுப்பணித்துறை இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு 18,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 20,000 கன மெட்ரிக் டன் மணல் மற்றும் 7,500 மெட்ரிக் டன் எஃகு உள்ளிட்ட பொருட்கள் தேவைப்பட்டுள்ளது. மிகவும் சவாலாகத்தான் இருந்தது. தற்போது பிரம்மபுத்திரா மீது மேம்பாலம், பாலங்கள் என 22 பெரிய திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 21 பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

 

The post முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதி: அசாமில் 2026ம் ஆண்டுக்குள் 1,000 புதிய பாலங்கள் appeared first on Dinakaran.

Tags : Himanda Biswa Sharma ,Assam ,Gauwahati ,Kamakya Gate ,Maligaan ,Principal ,Dinakaran ,
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு