×

வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

காங்கயம், ஆக.31: கள்ளக்குறிச்சி வட்டாட்சியரின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, காங்கயத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், காங்கயம் வருவாய் ஆய்வாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இடைக்கால பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Kallakurichi District Collector ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்