×

தக்காளி விளைச்சல்‘ ஜாஸ்தி’;விலை ‘கம்மி’ விவசாயிகள் கவலை

தேவாரம், ஆக. 31: தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் அதிகரித்து, விலை குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தேவாரம் பகுதியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் உணவு சமைப்பதற்கு தக்காளியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். உணவில் தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தக்காளி வரத்தை அதிகரிக்கவும் விலையை கட்டுப்படுத்தவும் அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக தக்காளி அறுவடை அதிகரித்ததால் சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாரச்சந்தையில் கிலோ ரூ.100க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.20 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் வரத்து அதிகரித்ததால் மேலும் தக்காளியின் விலை குறையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post தக்காளி விளைச்சல்‘ ஜாஸ்தி’;விலை ‘கம்மி’ விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Devaram ,Theni district ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி