×

வீட்டு மனைப்பிரச்னை தகராறு வாலிபர் அடித்து கொலை: 3 பேர் கைது

திருத்தணி: திருத்தணியில் வீட்டுமனைப்பிரச்னையில் குடித்துவிட்டு தகராறு செய்து வாலிபரை அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சி எச் அக்ரஹாரம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் (30). இவர் தினமும் குடித்துவிட்டு அக்கம்பக்கத்திருடன் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த லோகநாதன் குடும்பத்தினரிடம் வீட்டு மனை பிரச்னை சம்பந்தமாக குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். எனக்கு சேரவேண்டிய இரண்டரை அடியை நீங்கள் அபகரித்துக் கொண்டு வீடு கட்டி விட்டீர்கள் என கூறி  குடித்துவிட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் பல முறை காவல் நிலையம் சென்று பல்வேறு கட்டங்களில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றி முன்தினம், வழக்கம்போல் மீண்டும் சுதாகர் குடித்துவிட்டு போதையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த லோகநாதனின் வீட்டின் முன் நின்றுக் கொண்டு தரகுறைவாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மிகவும் கோபம் அடைந்த குடும்பத்தார்.  அவரை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் திருத்தணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இந்த கொலைக்கு காரணமான லோகநாதன்(60), ஹேமநாதன்(30)  மற்றும் பாபு (30) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post வீட்டு மனைப்பிரச்னை தகராறு வாலிபர் அடித்து கொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Volleyber ,Thiruthani ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...