×

ஒட்டன்சத்திரத்தில் செப்.3ல் செஸ் போட்டி

ஒட்டன்சத்திரம், ஆக. 31: திண்டுக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வரும் செப்.3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. வயது அடிப்படையில் 9, 12, 15 ஆகிய பிரிவுகளில் நடக்கும் இப்போட்டியில் 60 பரிசுகள் வழங்கப்படும்.கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை 9787866583 என்ற தொலைபேசி எண்ணில் செப்.2ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என கான்பிடென்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் தெரிவித்துள்ளார்.

The post ஒட்டன்சத்திரத்தில் செப்.3ல் செஸ் போட்டி appeared first on Dinakaran.

Tags : Otanchatra ,Otanchatram ,Dindigul ,Kalanchipatti ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் மோதி மான் பலி