×

இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆவடி வருகை: திரளாக பங்கேற்க டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அழைப்பு

திருவள்ளூர், ஆக. 31: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மதுரையில் ஒற்றை சிலம்பை தம் கையில் ஏந்தி நீதி கேட்டாள் கண்ணகி, அதே மதுரையில் ஒற்றைச் செங்கல்லை எடுத்து கல் இங்கே? எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என ஒன்றிய அரசுக்கு கேள்விக்கணை எழுப்பி தேசம் அதிர நீதி கேட்டவர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வினால் சிதைந்து போவதை எண்ணி மனம் வருந்தி ஒன்றிய அரசுக்கு ஏதிராக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடத்தி தன் எதிர்ப்பை தமிழ மக்களின் நெஞ்சங்களில் பதிவு செய்தவர் உதயநிதி ஸ்டாலின். எனவே இந்த மாபெரும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களை அழைத்து வெண் சீருடை அணிந்து, வாகனங்கள் ஏற்பாடு செய்து பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆவடி வருகை: திரளாக பங்கேற்க டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Avadi ,DJ Govindarajan ,MLA ,Tiruvallur ,Thiruvallur East ,District ,DMK Secretary ,Thiruvallur ,Aavadi ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...