×

அய்யம்பாளையம் விவசாய தோட்டத்தில் ரூ.5,000 மின்மோட்டார் ஒயர் திருட்டு

தோகைமலை, ஆக. 31: கடவூர் அருகே விவசாய தோட்டத்தில் ரூ.5,000 மதிப்பிலான மின்மோட்டார் ஒயரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே தெற்கு அய்யம்பாளையம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தற்போது தெற்கு அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அன்று தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அதனைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி அன்று சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு மீண்டும் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆனந்தராஜ் சென்றுள்ளார்.

அப்போது தோட்டத்தில் உள்ள மின் மோட்டார் ஒயர் அறுக்கப்பட்டு ஒயர் மாயமாகி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தராஜ் அருகில் கிடக்கும் என்ற நம்பிக்கையில் தேடி பார்த்துள்ளார். ஆனால், மர்ம நபர்கள் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 70 அடி நீளம், மின் மோட்டார் ஒயரை அறுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்தராஜ் பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் விவசாய தோட்டத்தில் மின் மோட்டார் ஒயரை அறுத்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post அய்யம்பாளையம் விவசாய தோட்டத்தில் ரூ.5,000 மின்மோட்டார் ஒயர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ayyampalayam ,Thokaimalai ,Kadavur ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...