×

6-10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணை: பள்ளி கல்வி துறை வெளியிட்டது

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வை நடத்த வேண்டும். இதன்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை காலாண்டு தேர்வை நடத்த வேண்டும்.இந்த தேதிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 19ம் தேதி மொழிப்பாடம், 20ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 22ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணக்கு, 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்த வேண்டும்.

இந்த தேர்வுகளை பொறுத்தவரையில் 6, 7ம் வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிக்க வேண்டும். 8ம் வகுப்புக்கு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையும், 9ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடத்த வேண்டும். பத்தாம் வகுப்புக்கான தேர்வுகளை பொறுத்தவரையில் 19ம் தேதி மொழிப்பாடம், 20ம் தேதி ஆங்கிலம், 22ம் தேதி கணக்கு, 25ம் தேதி அறிவியல், 26ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 27ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகளை, மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரை நடத்த வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு செப்டம்பர் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.45 வரை நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 6-10 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணை: பள்ளி கல்வி துறை வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...