×

3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5.90 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு

சென்னை: 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5.90 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன என அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நன்னிலம் வட்டம் சிறுபுலியூர் கிருபா சமுத்திரபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 24 ஏக்கர் நன்செய் நிலம் மீட்கப்பட்டது.

The post 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5.90 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tutukudi ,Nagai ,Thirukoils ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...