×

திருமங்கலத்தில் வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறித்த ரவுடி உட்பட 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி 88வது வார்டு உதவி செயற் பொறியாளர் பார்த்தசாரதி என்பவர், திருமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருந்ததாவது; திருமங்கலம் கலைவாணர் நகர் 2வது அவென்யூ மெயின் ரோடு அருகே சென்னை மாநகராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இரவு வடமாநில வாலிபர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று பட்டா கத்தியுடன் உள்ளே புகுந்த இரண்டு பேர், தர்ப்பூர் இஸ்லாம்(22) என்பவரின் கழுத்தில் கத்தியைவைத்து குத்தி விடுவேன் என்று மிரட்டி செல்போன், 3,500 ஐ பறித்து தப்பினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். இதன்படி திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு பேரின் உருவம் அடையாளம் காணப்பட்டது. இதன் அடிப்படையில், நேற்று திருமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த பாடி பகுதியை சேர்ந்த ரவுடி ராஜதுரை(22), இவரது கூட்டாளி விக்னேஷ்(எ) விக்கி(22) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள்தான் தர்பூர் இஸ்லாமை மிரட்டி செல்போன், பணம் பறித்தவர்கள் என்று தெரிந்தது. இவர்கள் மீது வழக்குபதிவு செய்து செல்போன் பைக் மற்றும் 650 ரூபாய், பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருமங்கலத்தில் வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறித்த ரவுடி உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Valibar ,Thirumangalam ,Chennai Corporation ,88th ,Ward ,Assistant ,Engineer ,Bharthasarthi ,Tirumangalam Police Station ,Valiber ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...